இதையடுத்து, விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமைப்பு அலுவலரிடம் கேட்டபோது, ' அரசு ஊழியர் குடியிருப்பில் உள்ள பழமையான மரம் வெட்டப்பட்டதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வரவில்லை. அதேபோல், அந்த மரத்தை வெட்டுவதற்கு எங்கள் அலுவலகத்தில் இருந்து அனுமதி வழங்கப்படவில்லை' என்றார். இப்பிரச்சினை குறித்து தங்களது கவனத்திற்கு வந்தால், அதிகாரிகள் அனைவரும் புகார் வந்தால் விசாரிப்போம் என ஒதுங்கிக்கொண்டனர். பழமையான மரத்தை வெட்ட உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதற்கு அதிகாரிகளிடம் தெளிவான பதில் கிடைக்கவில்லை.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி