இந்தநிலையில் பெலாகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் பூங்கா.பாக்யராஜ் பொது மக்களை பெலாகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்திலும்,
வேம்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், ஊராட்சி மன்ற தலைவர் அவர்களின் தனி அலுவலகத்திலும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மக்களை பாதுகாப்பாக பத்திரப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து மக்களுக்கு உணவு, குடிநீர் கிராமம் கிராமங்களாக சென்று, வழங்கி வருகிறார்.
மேலும், வெள்ள நீர்களில் இருந்து மீண்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். இதனை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
பெஞ்சல் புயல் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.