திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் அருகே வசிக்கும் ராஜி (55), அரசு கல்லூரியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். கடந்த 1-ம் தேதி இரவு, சாலை வழியாக நடந்து சென்றபோது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் வியாழன் மாலை உயிரிழந்தார். திண்டிவனம் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.