மது விருந்தோடு கொண்டாட ஆயத்தமாகும் சுற்றுலாப்பயணிகளால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தனியார் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுடன் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. உமாதேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோடில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில், ஆரோவில் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது, தங்கும் விடுதிகளில் மது விற்பனை செய்யக்கூடாது. விருந்தினர்களின் விபரங்களை முறையாக பராமரிக்க வேண்டும். 18 வயதிற்குக் குறைந்தவர்களுக்கு அறைகள் வழங்கக்கூடாது. விடுதிகளில் தங்கியுள்ள விருந்தினர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு இரவு 1 மணிக்குள் அறைகளுக்குத் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தினார்.