தொடர்ந்து கடையின் உரிமையாளரான திலக்கிற்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர் சம்பவம் குறித்து அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடையில் இருந்து 7 ஜோடி ஷூக்களும், 10க்கும் மேற்பட்ட துணிகளும், கல்லாவில் இருந்த ரூபாய் 10 ஆயிரம் பணமும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போது அதிகாலை 3 மணியளவில் கடையின் உள்ளே வந்த இரண்டு இளைஞர்கள் அங்கிருந்த துணிகள் மற்றும் செருப்புகளை எடுத்துச் செல்லும் காட்சி அதில் பதிவாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து, அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.