கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ருக்மணியின் தம்பி ஆனந்தராஜ் (25) என்பவர் உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ருக்மணி, நேற்று முன்தினம் அதிகாலை விஷத்தை எடுத்து குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ருக்மணி இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.