அதிகாலையில் கடைகளுக்குள் புகுந்த டாரஸ் லாரி.. கார் சேதம்

செஞ்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி கடைகளுக்குள் புகுந்தில் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமானது. நாமக்கல்லில் இருந்து செஞ்சியில் உள்ள உர தொழிற்சாலைக்கு ஜிப்சம் ஏற்றி வந்த டாரஸ் லாரி நேற்று (அக்.3) அதிகாலை செஞ்சி புறவழிச்சாலை வழியாக திண்டிவனம் சாலையில் வந்து கொண்டிருந்தது.

லாரியை சங்ககிரியைச் சேர்ந்த மனோகரன்(45) ஓட்டி வந்தார். 4. 10 மணியளவில், நீதிபதிகள் குடியிருப்பு எதிரே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் இருந்த கடைகளுக்குள் லாரி புகுந்தது. கடைக்கு வெளியே நிறுத்தி இருந்த பாரூக் என்பவருக்கு சொந்தமான இட்டியாஸ் வாடகை கார் சேதமானது.

மேலும் மெக்கானிக் கடை, மூங்கில் கழி விற்பனை செய்யும் கடை, பஞ்சர் கடை ஆகிய கடைகளும் சேதமானது. இந்த விபத்தில் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் ஜே. சி. பி. , மற்றும் கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி