விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த ஆலகிராமம் பகுதியில் கோவில் கொண்டுள்ள திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் சிவாலயத்தில் சுக்ரவார பிரதோஷ விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. நந்திபகவான், மூலவர் எமதண்டீஸ்வரர், திரிபுரசுந்தரி சுவாமிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.