இந்தக் கூட்டத்தில் தண்ணீர் தினத்தின் கருப்பொருளைப் பற்றி விவாதிக்க வேண்டும். மேலும் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல், தூய்மையான குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தல், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்வு செய்தல், அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் பணிகளைத் தேர்வு செய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
மேலும் இதுகுறித்த விவரங்கள் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்படவுள்ளது. எனவே, தங்கள் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் மார்ச் 29-ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று, கோரிக்கைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.