செஞ்சியில் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதித்ததை கண்டித்து, செஞ்சியில் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனர் மழைமேனி பாண்டியன் தலைமை தாங்கினார். திருநாவுக்கரசு, ஜெயராமன், அய்யனார், மகிழ்வரசு, அரங்கன் முன்னிலை வகித்தனர். மா. கம்யூ. , மாதவன், காங். , நகர தலைவர் சூர்யமூர்த்தி, வட்டார தலைவர் சக்திவேல், மனிதநேய மக்கள் கட்சி சையத் உஸ்மான், ஜாக்லின், கோபன்னா, தன்மானன், ஆல்பர்ட் வேளாங்கன்னி உள்ளிட்டோர் பேசினர். சங்கர் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி