இந்த நிகழ்ச்சிக்கு பாலாஜி குழுமம் தொழிலதிபர் சுரேஷ் தலைமை தாங்கினார். விழா இணை ஒருங்கிணைப்பாளர் தென்னரசு வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட இணை செயலாளர் அருள், ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், அமுதன் முன்னிலை வகித்தனர். இஸ்ரோ விஞ்ஞானி சசிக்குமார் கேள்விகள் கற்றலுக்கான திறவுகோல் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்களின் ஹைகூ கவிதை தொகுப்பின் இரண்டாவது பதிப்பை வெளியிட்டார். பெற்றோர் புத்தகத்தை பெற்று கொண்டனர். தொகுப்பாசிரியர் செந்தில்பாலா ஏற்புரை நிகழ்த்தினார்.
சாராத மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளாளர் கலைச் செல்வன், ஆலம்பூண்டி ராஜா தேசிங்கு வித்யாலயா பள்ளி தாளாளர் வெங்கடேசன், செஞ்சி வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளாளர் சங்கர், வட்டார கல்வி அலுவலர் முருகன், பள்ளி துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கண்ணன் மற்றும் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.