இதில் கலந்துகொண்ட திருக்கோயிலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு ஜமாபந்தியில் மனு அளித்த பட்டா தொடர்பாக 73 பேருக்கு பட்டா ஆணையும், 5 பேருக்கு வேளாண் விதை பயிர்களும், 2 பழங்குடியினருக்கு இலவச வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கி பேசினார். தொடர்ந்து இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், லூயிஸ், மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தி, வட்டாட்சியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து