இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திண்டிவனம் தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்ததின் பேரில் திண்டிவனம் தீயணைப்புத் துறையினர் சம்பவம் இடத்திற்கு நேரில் சென்று தீயை முற்றிலும் அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை துரிதமாக செயல்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தியதால் கார் தப்பியது. இந்த தீ விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.