விழுப்புரம் திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, கர்நாடகாவின் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்தது துரதிஷ்டவசமானது என்றும், மக்கள் தனிப்பட்ட நபர்களை விட சின்னத்திற்குத்தான் வாக்களித்துள்ளனர் என்பதை உணர்ந்து அதற்குரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.