புகழ்பெற்ற மயிலம் மலையில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியசாமி கோவிலில், தை மாத கடைசி சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று 500க்கும் மேற்பட்ட புதிய தம்பதியருக்கு திருமணம் நடைபெற்றது. விடுமுறை நாளான இன்று, ஆயிரக்கணக்கான பொது மக்களும் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். இதனால் கோவில் பக்தர்களால் நிரம்பி வழிந்தது.