தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (நவ.23) காஞ்சிபுரத்தில் மக்களை சந்திக்க இருக்கிறார். உள்ளரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 50 நாட்களுக்குப் பிறகு விஜய், பொதுநிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் நிலையில், அவர் என்ன பேசப் போகிறார் என பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் இந்த கூட்டத்தில், பரந்தூர் விமானநிலையம் மற்றும் SIPCOT குறித்து அவர் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.