கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, தவெக தலைவர் விஜய் நேற்று (அக். 28) மாமல்லபுரத்தில் நேரில் வரவழைத்து ஆறுதல் கூறினார். அப்போது பாதிக்கப்பட்ட 37 குடும்பங்களின் தலைவர்களின் பெயரில் ரூ. 5 லட்சத்திற்கான வைப்பு தொகைக்கான ரசீதை அவர்களிடம் கொடுத்துள்ளார். இதன் மூலம் மொத்தம் ரூ. 1.85 கோடி தொகையை அவர் வழங்கியுள்ளார். மேலும், அக்குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் செலவில் மருத்துவ காப்பீடு அட்டையையும் (Health Insurance) அவர் வழங்கியுள்ளார்.