தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க தலைவர் விஜய், நாளை மறுநாள் (மே 7) முதலமைச்சராகப் பதவியேற்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காகச் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, நாளை காலை லோக் பவன் சென்று ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்து, ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரவுள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.