CBI விசாரணைக்கு ஆஜராக நாளை (ஜன.12) டெல்லி செல்லும் தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டெல்லி காவல்துறையிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கரூரில் தவெக பரப்புரை நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் விஜய்க்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நாளை மறுநாள் மாலை சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நாளை இரவு விஜய் தங்கும் இடத்தில் பாதுகாப்பு அவசியம் என தவெக நிர்வாகி நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
நன்றி: நியூஸ் தமிழ்