மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று (மார்ச்.10) நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவை தொடர்ந்து, விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கூடுதல் ஓடுதளங்கள் அமைக்கவும் தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
நன்றி:News18