பாகிஸ்தானின் டிரோன்களை இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் சம்பா, பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் பாகிஸ்தான் ஏவிய டிரோன்களை இந்திய ராணுவம் இடைமறித்து அழித்துள்ளது. இதன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஜம்மு மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.