கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் ஆஜர்

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ அலுவலகத்தில் இன்று (டிச.,20) இரண்டாவது நாளாக ஆஜராகி உள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட நபர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தகவல்களை சேகரித்து வருகின்றனர். கடந்த செப்., 27ஆம் தேதி விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி