மூத்த பத்திரிகையாளர் ஆனந்தி காலமானார்

மூத்த பத்திரிகையாளர் ஆனந்தி (86) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இலங்கையின் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆனந்தி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிபிசியில் பணியாற்றியுள்ளார். இவரது பல்வேறு தொடர்கள், முக்கிய நபர்களின் பேட்டிகள் பிபிசி தமிழோசை நேயர்களிடையே மிகவும் பிரபலமானவை. இவர் 2005-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற நிலையில், லண்டனில் இன்று (பிப்.22) அவர் இயற்கை எய்தினார். ஆனந்தி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி