மிக கனமழை எச்சரிக்கை - ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களுக்கு இன்று (நவ.23) வானிலை மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கையாக தமிழக பேரிடர் மீட்பு படையின் 2 அணியினர் தூத்துக்குடியிலும் ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்திலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி