வேலூர் மாவட்டம் ஊசூரைச் சேர்ந்த 37 வயது ரவி, குத்தகைக்கு எடுத்த நிலத்தில் செங்கல் சூளை நடத்தி வந்தார். நேற்று (மே 26) அவர் தனது செங்கல் சூளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த அரியூர் போலீசார், ரவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.