மேலும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரியதர்ஷினியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பிரியதர்ஷினி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இதனிடையே புகார் அளிக்க வந்திருந்த பிரியதர்ஷினி திடீரென காவல் நிலையம் எதிரே சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.இதைப் பார்த்த போலீசார் அவரை அழைத்து மனு குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் தர்ணாவில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து அவர் தர்ணாவை கைவிட்டார்.