வேலூர்: 6 கிலோ கஞ்சா பறிமுதல்

வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் இன்று(அக்.5) வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த நபரை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஒரிசாவை சேர்ந்த ஜெய கௌடா என்பதும், ஒரிசாவில் இருந்து வேலூருக்கு விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. பின்னர் அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி