வேலூரில், டியூஷன் சென்டர் நடத்தி வந்த மீர் பாகர் அலி(54) என்பவர், 7-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை தவறாக தொட்டு சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மீர் பாகர் அலியை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.