மேலும் இதில் தொடர்புடைய பள்ளிகொண்டா அருகே கொல்லமங்கலம் செல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த அபிஷேக் (31), வேலூர் சம்பத்நகரை சேர்ந்த விமல் (24), மூஞ்சூர்பட்டை சேர்ந்த ரவிக்குமார் (25) ஆகியோரையும் பாகாயம் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், போதை மாத்திரைகள் விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்ட அபிஷேக் டிப்ளமோ படித்துள்ளார். அவருக்கு இன்று பெங்களூருவில் திருமணம் நடக்க இருந்தது. இந்தநிலையில் அவர் செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் யாரிடம் போதை மாத்திரைகள் வாங்கினர்? , எப்படி வாங்கினர்? உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர்.