பேரணாம்பட்டு: காவலர் விபத்தில் பலி

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் உள்ள மசிகம் கிராமத்தில் காவல் அதிகாரியான ராஜேஷ் வசித்து வந்தார். ராஜேஷ் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி ராஜேஷ் பின் மண்டையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். மேலும் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி