ஜெயில் அருகே பேருந்து வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த கார், 2 தள்ளுவண்டி கடைகள் மீது மோதியது. தொடர்ந்து அங்கு நின்று கொண்டு இருந்த மோகன்ராஜ் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் விரைந்து சென்று மோகன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை