வேலூரில் தலையில் கல்லை போட்டு கொலை

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி வ. உ. சி நகரைச் சேர்ந்த 43 வயது கட்டிட தொழிலாளி ராமு, நேற்று (பிப். 12) அப்பகுதியில் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். மேலும், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி