இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழியிடம் கேட்ட போது, இது மாணவிகள் தொடர்பான பிரச்சனை என்பதால் நிதானமாக தீர விசாரித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைக்கு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்து விசாரித்துள்ளோம். மேலும் இப்போதைக்கு அந்த பள்ளியில் மட்டும் மதிய உணவு இடைவேளையின் போது ஆசிரியர்களையும் மாணவிகளோடு அமர்ந்து சாப்பிட சொல்லியுள்ளோம். ஏற்க்கனவே பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி இதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். அந்த மாணவிகளின் பெற்றோரையும் அழைத்து பேச திட்டமிட்டுள்ளோம் என கூறினார்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்