வேலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் அபேஸ்

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் காட்பாடியைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் (மே 20) புகார் மனு அளித்தார். பள்ளிகொண்டாவைச் சேர்ந்த தம்பதியினர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் ₹12 லட்சம் பெற்று ஏமாற்றியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த தம்பதியினர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி