சென்னையைச் சேர்ந்தவர் ராஜேஷ் இவர் கேரளாவில் பால் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருச்சூர் பகுதியை சேர்ந்த ரோகினி (வயது 30) என்பதுடன் திருமணம் ஆகியுள்ளது இவர்களுக்கு இரண்டரை வயதில் குழந்தை உள்ள நிலையில் ராஜேஷின் தந்தை சென்னையில் உள்ள நிலையில், அவரை காண, கணவன் மனைவி இருவரும் திருவனந்தபுரம் விரைவு ரயிலில் நேற்று இரவு கேரளாவில் இருந்து சென்னைக்கு சென்றுள்ளனர்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில் வந்து கொண்டிருந்த போது, ராஜேஷ் மற்றும் ரோகிணி இருவரும் ரயிலில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளனர்
பின்னர் ராஜேஷ் மட்டும் இருக்கைக்கு திரும்பிய பொழுது வெகு நேரம் ஆகியும் ரோகிணி இருக்கைக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் ராஜேஷ் இது குறித்து காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் காட்பாடி ரயில்வே காவல்துறையினர் மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் ரோகினியை தேடி வந்த நிலையில் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ரோகினி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது, ரோகினியின் உடலை மீட்ட ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.