இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ரயில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதே போல ரயில்வே பாதையை கடக்க முயன்று உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருவதால் வாணியம்பாடியில் ரயில்வே நிர்வாகம் சார்பில் யாரும் ரயில்வே பாதையை கடக்க முடியாத வண்ணம் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.