அரக்கோணம் அடுத்த நாகவேடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில், கழிவறைக்கு சென்ற ஆசிரியரை +2 மாணவர்கள் சிலர் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆசிரியர் ஒரு மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவனின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அரக்கோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.