இதற்கிடையில் வேலூர் மாவட்டம் வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் அன்பரசன். இவர், தனது முகநூல் பக்கத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிராகக் கருத்து பதிவு ஒன்றுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்துப் பகுதியில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட காவல்துறையினர் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அன்பரசனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு