தகவலின் பேரில் மாவட்ட எஸ்பி தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் வீட்டில் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்த போது வீட்டில் சுமார் 5.5 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்து முருகனை திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து திம்மாம்பேட்டை போலீசார் முருகன் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.