குடியாத்தம் அடுத்த ராமாலை கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்கு மார் (வயது 35). கீழ்ஆலத்தூர் அடுத்த நாகல் புதுமனை காலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் சென்னராயனபள்ளி கிராமம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற போது சாலையில் நடந்து சென்ற கே. வி. குப்பம் பகுதியை சேர்ந்த கந்தசாமி (78) என்பவர் மீது மோதினார்.
இதில் மனோஜ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். கந்தசாமி படுகாயமடைந்து வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.