பேரணி கூஜா காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு ஜமாத் சாலை, சி.என்.ஏ சாலை, ஜின்னா சாலை, வாரச்சந்தை சாலை, மலங்க சாலை வழியாக சென்று மீண்டும் தனியார் பள்ளி வளாகத்தில் பேரணி முடிவடைந்தது. இதில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு போதைப்பொருட்களுக்கு எதிராக கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர்.
முன்னதாக தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானதி ஆகியோர் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர். தொடர்ந்து போதைப்பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டு பின்னர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.