திருப்பத்தூர்: காவல் நிலையம் அருகே சுற்றி திரியும் நாய்கள் - பொதுமக்கள் அச்சம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காமராஜபுரம் பகுதியில் நகர காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காவல் நிலையத்தில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் புகார்களை கொடுப்பதற்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நகர காவல் நிலையம் அலுவலக நுழைவாயிலில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி வருவதால் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் கடும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். மேலும் இது குறித்து நகராட்சி துறையினர் நாய்களைப் பிடிக்க கோரிக்கை வைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி