அப்போது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செல்லும்போது கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் தன்னுடைய டிராக்டர் வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் நிலைதடுமாறி டிராக்டர் மீது மோதியதில் கீழே விழுந்து கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் பின்னால் அமர்ந்திருந்த சேவாக் என்பவருக்கு சிறிது காயம் ஏற்பட்டது. மேலும் பலத்த காயமடைந்த விஷாலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.