காட்பாடி: ஆந்திராவில் இருந்து மணல் கடத்திய 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு ஆற்று மணல் கடத்துவதாக காட்பாடி துணை எஸ்பி பழனிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் காட்பாடி செங்குட்டை பகுதியில் நேற்று (ஜூலை 31) வாகன தணிகையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். வேனில் ஆற்று மணல் இருந்ததும், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தி வந்த ஆந்திர மாநிலம் நங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் (வயது 56), அவருடைய மகன் சசிகுமார் (32) முசிறப்பள்ளி பகுதியை சேர்ந்த சதீஷ் (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி