திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே காக்கங்கரை அடுத்த பரதேசிப்பட்டியில் உள்ள மகாசக்தி மாரியம்மன், காளியம்மன், முத்துவேடியம்மன், ஓங்காரப்பன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது.
பின்னர், மாரியம்மன், காளியம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மேளதாளத்துடன் அம்மன் கரக ஊர்வலம், மாவிளக்கு, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது.