திருப்பத்தூர்: செல்போன் டவருக்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு

திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் இர்ராம்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் மோட்டூர் ஊராட்சி ஊர் பொதுமக்கள் இர்ராம்பட்டி மற்றும் மோட்டூர் ஊராட்சியில் இடையிலுள்ள செட்டேரியான் வட்டத்தில் வசிக்கும் காசியின் மகள் திருமதி சுமதி நிலத்தில் செல்போன் டவர் அமைப்பதை தடுக்க வேண்டி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

அந்த மனுவில் சுமார் 3500 மக்கள் அப்பகுதிகளில் வசித்து வருவதாகவும் 1200 ஆண்கள் 1300 பெண்கள் ஆயிரம் குழந்தைகள் உள்ளனர். செல்போன் டவர் அமைத்தால் மின்காந்த கதிர்வீச்சால் அதிக பாதிப்புகள் உருவாகும் கர்ப்பிணி பெண்களின் கருச்சிதைவு ஏற்படும், புற்றுநோய், ரத்த புற்றுநோய், மார்பக புற்றுநோய் அதிக அளவில் வருவதற்கு வாய்ப்புள்ளது. அனைத்து வகை புற்றுநோய் ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படும் இதனால் எங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எங்களின் எதிர்கால சந்ததியினர் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் வாழ்க்கை பாதிக்காமல் இருக்க எங்கள் கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் செல்போன் டவர் அமைப்பதை தடுக்க வேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி