திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள பொது மக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் அளிக்க வந்திருந்த நிலையில் 500க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆட்சியர் இன்று வரவில்லை என்பதால் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் இடம் பொதுமக்கள் மனுவை சமர்ப்பித்தனர். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு மற்றும் அதிக கூட்டம் காணப்பட்டது.