திருப்பத்தூரில் கடன் தொல்லையால் கட்டிட தொழிலாளி தற்கொலை

திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி அடுத்த காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகேசன் இவரது மகன் பழனி 32. இவருக்குத் திருமணம் ஆகவில்லை. இவர் கட்டிட மேஸ்திரி வேலை பார்த்துவருகின்றார். சில வருடங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் போது, ஒரு கொலை வழக்கில் ஈடுபட்டதாக பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து, இவரது சொந்த ஊரான காமராஜ் நகர் பகுதியில் தனியாக இவரது வீட்டில் வசித்துவந்தார். 

இவருக்குக் குடிப்பழக்கம் உள்ளது. இவர் சுமார் நான்கு லட்சம் ரூபாய் கடன் வாங்கி, கடனை அடைக்க முடியாமல் வந்ததாக கூறப்படுகிறது. இவர் ஊத்தங்கரை பகுதியில் கட்டிட மேஸ்திரி வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில், மனவேதனையில் பழனி வேலைக்குச் செல்லாமல், மதுபோதையில் இவரது வீட்டிற்குள் கதவை தாளிட்டுக்கொண்டு, யாவரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, கந்திலி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, கதவை உடைத்து, சடலத்தை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி