திருப்பத்தூர் மாவட்டம், ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவள்ளியிடம், "மேடம் உங்க சீட்டை தொட்டு பார்க்கட்டுமா" என்று கேட்ட அரசு பள்ளி மாணவிக்கு, ஆட்சியர் தனது இருக்கையை கொடுத்து அமர வைத்து ஊக்கமளித்து உற்சாகப்படுத்தினார். இந்த செயல் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.