இதனால் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் திருவண்ணாமலை சாலையில் உள்ள திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே குவிந்துள்ளனர். மேலும் அவ்வழியாக சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்துள்ளனர். இதன் காரணமாக சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளன. இதனால் போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். மேலும் அந்த இடத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வந்தால் கைது செய்ய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை